"ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளோம் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்" என் தேசம் என் உரிமை கட்சி நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம் என் உரிமை கட்சியில் இதுவரை ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என கோவை மாவட்ட நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம்  என் உரிமை கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.இதில் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிட போவதாகவும் இதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறினர்.

மக்களின் உரிமையை மீட்டெடுக்க உருவாக்கிய இயக்கம் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளதாக கூறினர். ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவது, மது ஒழிப்பு, மதசார்பற்ற நாட்டை உருவாக்குவது என பல்வேறு பொது கொள்கைகள் உள்ளதாகவும் இதுவரை 10 க்கும் மேற்பட்டோர் விருப்ப விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிவித்தவர்களை பொதுமக்கள் மத்தியில் கேட்கபடும் 10 கேள்விகளில் சிறப்பாக பதில் அளிப்பவர் தேர்ந்தெடுக்கபட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்  என தெரிவித்தனர்.

மேலும் கட்சியில் ஆன்லைன் மூலம் இதுவரை 7 லட்சம் உறுப்பினர்கள் இனைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என தெரிவித்தவர்கள் கோவை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வரும் 17 மற்றும் 18 தேதிகள் நடைபெறும் என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...